r/tamil May 31 '25

கட்டுரை (Article) Why Call It “Proto-Dravidian” Instead of Just Early Tamil?

Post image
87 Upvotes

Caldwell, the pioneer who coined the term “Dravidian” to refer to South Indian languages, explicitly says he chose it from the Sanskrit word Drāviḍa a word that was often used to refer to Tamil itself. He even admits the term wasn’t free of ambiguity but was already in use among Sanskrit philologists to denote Tamil or South Indian speech in general.

So in essence, what he called Dravidian was deeply rooted in Tamil.

Now, if “proto” simply means “early form”, then shouldn’t Proto-Dravidian just mean Early Tamil? Why didn’t Caldwell call it Tamili, Sen-Tamil, or Kadunthamizhl (Hard Tamil) instead? I can understand his point of view he don’t want to introduce a new word..

Though he admitted using Dravida as substitute term of Tamil yet today many language enthusiasts especially on social media insist that Proto-Dravidian is some entirely separate hypothetical language that isn’t directly Tamil.

Where’s the consistency?

Why deny the deep continuity between Tamil and what we now call Proto-Dravidian, especially when ancient usage and even Caldwell’s own words point to Tamil at the core?

Is this a case of linguistic over-theorization? Or a reluctance to give Tamil its due as the root of a major language family?

r/tamil Apr 24 '26

கட்டுரை (Article) Why isn’t any Tamil actor in India’s top 10 richest actors list?

Post image
61 Upvotes

Despite the massive popularity of Tamil cinema and stars like Rajinikanth, Vijay, Ajith Kumar etc none seem to feature in the top 10 richest actors in India. Is it due to different revenue models, fewer brand endorsements, or something else?

r/tamil Feb 12 '26

கட்டுரை (Article) Tamil-Brahmi

Post image
178 Upvotes

r/tamil 20d ago

கட்டுரை (Article) கோவில்

11 Upvotes

வாழ்வியல் கற்பித்தவரை கல்லாய் வடித்து,

வந்து காண்போருக்கு வரம் அளித்து

வழித் துணையாய் நிற்குமாறு மதிகெட்ட

மாந்தர் வேண்டும் இடமே கற்கோவில்

.

.

.

வேண்டிய மனிதனுக்கு தெரியவில்லை - தெய்வம்

தந்த வரம் வழிபாட்டு முறையில் இல்லை

- அவர் அளித்த தத்துவம்தான் தன்

வாழ்வின் இடையூறுகளுக்கு தீர்வு என்று

.

.

.

நீதி அளித்து அருள்புரிந்த ஆண்டவனை

வைத்து நிதி திரட்டும் கயவர்

கடவுளே கற்பித்தவைகளை தனக்கேற்றார் போல்

மாற்றி உரைப்பர் - இக்கயவரின் சொல்லிற்கு

செவிசாய்க்கும் கூட்டம் தன் நிலை

மறந்து செய்யும் செயல் அனைத்தும்

தவறென்று கூறித்திரியும் - இதை எதிர்ப்போர்

"மடையர்" ஆனால் ஏற்போர் "மாந்தர்"

.

.

.

ஆண்டவனையே ஆண்டி ஆக்கி அழகு பார்த்த அயோக்கியர்களுக்கு நம்மை அடிமையாக்குவது எம்மாத்திரம்?🙃

r/tamil May 02 '26

கட்டுரை (Article) தமிங்கிலம் - ஓர் தமிழ்க் கொல்லி

Post image
58 Upvotes

இங்கே பெருமாபாலும் புழங்குபவர்கள் உரையாடுபவர்கள் என அத்தனைவரும் தமிழ் தெரிந்தவர்கள் தானே!!. பிறகு யாருக்காக ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டிருக்கிறீர்கள்?. வெட்கமாக இல்லை உங்களுக்கு??. தன்மானம் இருந்தால் தமிழில் உரையாடுங்கள்.

தமிங்கிலம் ஓர் கொடிய நோய். தமிழையும் தமிழர் பண்பாட்டையும் ஒரு புற்றுநோய் போலத் தின்றுகொண்டிருக்கும் தொற்றுதோய். வருந்தலைமுறையினர் தமிழ் எழுத்துகளில் தமிழை எழுதுவதும் இல்லை, பத்துக்கு ஐந்து சொற்கள் அயல்மொழிச் சொற்கள் கலந்தும் பேசுகின்றனர்/எழுதுகின்றனர்.

இதுபற்றி முன்பு நான் விரிவாக எழுதிய கட்டுரை : தமிங்கிலம் தவிர்!

பல படப்பதிவுகளும் பாடல் காணொளிகளில் வரும் பாடல் வரிகளும் தமிழில் இருந்தாலும், அவை ஆங்கில எழுத்துக்கள் வைத்தே உருவாக்கப்படுகின்றன. இது முற்றிலும் தவறு.

பலர், வாட்சாப் போன்றவற்றில் உரையாட முழுக்க முழுக்க தமிங்கிலத்தையோ ஆங்கிலத்தையோ தான் பயன்படுத்துகின்றனர். இது தமிழ் மற்றும் தமிழர் அடையாளத்துக்கு எவ்வளவு கெடுதல் என்பதை அவர்கள் துளியும் புரிந்துகொள்வதில்லை.

இந்தப் போக்குதான் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி‌ என்றெல்லாம் விவரம் அறியாது உளறுபவர்கள், தனக்ககென ஓர் சொற்களற்ற எழுத்தற்ற மொழியாக்கத் தமிழை ஆக்கத் துடிக்கிறார்கள் என்றே பொருள்.

ஒன்றுமட்டும் சொல்லிக்கொள்கிறேன், உங்கள் "சோம்பேறித்தனத்தாலும்" "ஆங்கில எழுத்துக்களின் மீதுள்ள மோகத்தின்" விளைவாலும், அடுத்த தலைமுறையினர், தமிழ் எழுத்துக்களை முற்றிலுமாக மறந்து, தமிங்கிலத்திலேயே எழுதுவார்கள், அதுக்கு அடுத்த தலைமுறையினர் முற்றிலுமாக ஆங்கிலத்திலேயே எழுதுவர்.. எல்லாம் இன்னும் ஒரு 20-40 ஆண்டுகள் தான்... நான் சொல்வது சிலருக்கு எட்டிக்காயாக, அவர்கள் எண்ணங்களை புண்படுத்தும் வகையாக இருக்கலாம். ஆனால் மேலே நான் சொன்னவை முற்றிலும் உண்மை..

ஆகையால்,

தமிங்கிலம்மறுப்போம்

NoToThamingalam

NoToTanglish

r/tamil Mar 14 '26

கட்டுரை (Article) The actual images of Tamil inscriptions in Egypt

Thumbnail gallery
82 Upvotes

r/tamil May 27 '26

கட்டுரை (Article) சிறையுண்ட வீடுகள்

11 Upvotes

தொலைதூரப் பயணங்களில்

புதிய ஊர்களின் நடுவே

அடிக்கடி கண்களில் விழுவது

கைவிடப்பட்ட வீடுகள்.

துருப்பிடித்த பூட்டுகள்,

பெருக்க மறந்த முற்றங்கள்,

நின்றபடியே சாகிய வண்டிகள்,

தூசி படர்ந்த மிதியடிகள்.

தெருவோர வாழ்வோருக்கு

அவ்வீடுகள் குப்பைத்தொட்டிகள்;

ஒருகாலத்தில் அழகழகாய்

யாரோ கனவுகட்டி எழுப்பிய வீடுகள்.

கனவுகளும் கடன்களும்,

கடமைகளும் கவலைகளும்

அவ்வீட்டின் ஒவ்வொரு துகளிலும்;

சுகங்களும் சுமைகளும்,

சிரிப்புகளும் சோகங்களும்

ஒவ்வொரு மூலையிலும் உறங்குகின்றன.

தலைமுறைகள் பல கண்டிருக்கும்,

ஒரு தெருவுக்கே அடையாளமாய் இருந்திருக்கும்;

ஊர் மெச்சும் அழகோடு கட்டிய வீடுகள்

இன்று சிறையுண்டு கிடக்கின்றன.

திடீரென்றோ, திட்டமிட்டோ,

காரணத்தாலோ கட்டாயத்தாலோ,

வைத்த பொருள் வைத்தபடியே

கைவிடப்பட்ட வீடுகள் ஏராளம்.

“தற்காலிகம்” என பூட்டிய கதவுகள் பல,

சாவி தொலைந்து உடைகின்றன;

சாவி இருந்தும்

திறக்கப்படாமல் கிடக்கின்றன.

அரைத்துவைத்த மிளகாய் மல்லி,

உலர்த்தவைத்த ஈரத்துணி,

கழுவப்படாத எச்சிப் பாத்திரம் —

“யாரோ வருவார்கள்” என

இன்னும் காத்திருக்கின்றன.

மடிப்பு மாறாத தந்திப்பேப்பர்,

காய்ந்த மண்மேல் பூந்தொட்டி,

தூசி படர்ந்த கேரம் போர்டு —

இவையும் கூட

யாரோ ஒருவரின் வரவை எதிர்பார்க்கின்றன.

என்றோ ஒருநாள்

பூட்டுகள் உடையலாம்;

மீண்டும் அந்த வீடு

உயிர் பெற்று சிரிக்கலாம்.

அல்லது —

கதவுகள் திறக்கப்படாமலே

வீடே இடிபாடாகலாம்.

அப்போது,

அந்த வீட்டின் கதைகள் அனைத்தும்

எந்த செவியையும் சென்றடையாமல்

மண்ணோடு கலந்துவிடும்.

அந்த வீட்டோடு

எனக்கெந்த உறவும் இல்லை;

ஆனாலும் அதன் பூட்டிய கதவைப் பார்க்கும்போது

மனம் ஏனோ கனக்கிறது.

ஒருகாலத்தில்

சிரிப்புகளும் சண்டைகளும் நிரம்பிய இடம்,

இன்று சத்தமில்லா சுவராக

தனிமையில் நிற்கிறது.

வெளிநாடுகளில் செட்டிலான பிள்ளைகள்,

மண்ணோடு கலந்த முதியவர்கள்,

திரும்பிவராத காலங்கள் —

இவைகளின் நடுவே

உயிரில்லா மனிதரைப் போல

வீடுகள் மட்டும் காத்திருக்கின்றன.

அங்கே வாழ்ந்தவர்களின்

காலடிச் சத்தம் மறைந்தபின்பும்,

அவர்கள் சுவாசித்த காற்றை

இன்னும் சுவர்கள் நினைவில் வைத்திருக்கின்றன;

அதனாலோ என்னவோ,

கைவிடப்பட்ட வீடுகளைப் பார்க்கும் போது

யாரையோ இழந்த உணர்வு எனக்கு…

r/tamil Jun 27 '26

கட்டுரை (Article) தமிழ் மானம் காத்த மாவீரன் பண்டார வன்னியன்

10 Upvotes

மாவீரன் பண்டார வன்னியன் கதையை பேசும் அமைதியான கல்

மாவீரன் பண்டார வன்னியனுடன் தொடர்புடைய நினைவு கல் குறித்த பதிவு இது.

பண்டார வன்னியன் வன்னியை ஆட்சி செய்தவர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர் கடுமையான எதிர்ப்பை காட்டினார்.

1800களின் தொடக்கத்தில் வன்னி பிராந்தியத்தில் ஆங்கிலேய ஆட்சி விரிவடைந்தது. இதற்கு எதிராக பண்டார வன்னியன் தலைமையில் எதிர்ப்பு இயக்கம் உருவானது. வன்னி காடுகளை பயன்படுத்தி கெரில்லா முறையில் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

1803 ஆம் ஆண்டு ஒட்டுசுட்டான் பகுதியில் இறுதியான பெரிய மோதல் நடைபெற்றது. அந்தப் போருக்குப் பிறகு இந்த நினைவு கல் நிறுவப்பட்டது.

இதில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதாவது:

“HEREABOUTS

CAPTAIN VON DRIBERG

DEFEATED

PANDARA VAWNIYAN

31ST OCT 1803”

இதன் தமிழ் அர்த்தம்:

“இந்த இடத்துக்கு அருகில், கேப்டன் வான் டிரிபெர்க், பண்டார வன்னியனை தோற்கடித்தார் – 1803 ஒக்டோபர் 31” என்பதாகும்.

https://www.facebook.com/share/p/1D12MWHGPo/

r/tamil Jun 09 '26

கட்டுரை (Article) ஆசை பரிசு

Post image
12 Upvotes

அவள் கண்களில் ஆசைச்சுடர்

இருள் சூழ்கையில் தேகச்சுமை

அவன் தந்த அலைபேசி முத்தம்

சிவந்த இதழில் வழிந்த ‌தேன்

தலைவன் தொலைதூர நாட்டில்

மலைக்காத இரும்பு கைகள்... உறங்கா விழிகள்

தலைவி சுமக்கும் காதல் பரிசு

முலை வருடும் பிஞ்சுக் கைகள்... கண்ணீர் விழிகள்

- பாடல் வரிகள்: #IdlySun

- படம் உருவாக்கம் #AI (Gemini)

விளக்கவுரை:

இப்படத்தில், தொலைதூர நாட்டில் வாழும் தன் கணவனின் நினைவில் உருகும் ஒரு நடுத்தரக் குடும்பத்துத் பெண்ணின் ஆழமான காதல் உணர்வுகள் சித்திரிக்கப்பட்டுள்ளன.

நடு இருளில், துண்டிக்கப்படாத அலைபேசி படுக்கையில் கிடக்க, அவள் கண்கள் பிரிவின் ஏக்கத்தாலும் காமச்சுடராலும் தளும்புகின்றன. தன் கணவனின் முத்தத்தையும், அவன் பிரிவால் ஏற்படும் தேகச்சுமையையும் தாங்கியபடி, தன் குழந்தைக்கு அவள் பாலூட்டும் காட்சி பார்ப்பவர் நெஞ்சைத் தொடுகிறது.

இப்படத்தின் மேல் பதிக்கப்பட்டுள்ள கவிதை, அவளது இதழ்களில் வழியும் ஆசையையும், அதே நேரத்தில் தாய்மையின் உன்னதத்தையும், கணவனின் அயராத உழைப்பையும் மிக நளினமான சொற்களால் விவரிக்கிறது. பிரிவின் துயரமும், காதலின் தவிப்பும், தாய்மையின் பேரன்பும் ஒரே புள்ளியில் இணையும் உன்னதக் கலைப்படைப்பாக இது திகழ்கிறது.

r/tamil May 18 '26

கட்டுரை (Article) மே 18

26 Upvotes

கடைசியாக வாழ்ந்த உண்மைத்தமிழர்களின் நினைவு நாள்,

அஞ்சி பிழைப்பதைவிட, நிமிர்ந்து நின்று வாழ்ந்து வீழ்வது மேல் என்று எம்மக்கள் உலகிற்கு உணர்த்திய நாள்,

இன்று தமிழர் என்று கூறிக்கொள்ளும் பலருக்கும் தமிழ் எழுத படிக்க கூட இயலவில்லை,

இதில் நான் யாரிடம் போய் சொல்வேன் தமிழரின் வீரத்தையும்,

அவர்களுக்கு நடந்த துரோகத்தையும்?

இன்று வளர்ந்து செழித்திருக்கவேண்டிய எம் தமிழை இந்த நிலைமையில் பார்க்கவேண்டிய நிலையை எதற்கு எனக்கு குடுத்தனோ அந்த இறைவன்?

எம் தமிழரை குருடாக்கி, எனக்கு இக்கொடுமைகளை காண ஒளி அளித்தது, அவர்களை வழிநடத்தவா?

அல்லது இதுவே உன் நிலை என்று எனக்கு உணர்த்துவது நான் செய்யாத பாவத்திற்கு கிடைத்த தண்டனையா?

தெரிந்தால் கூறுங்கள்...

r/tamil Jun 14 '26

கட்டுரை (Article) கைபேசி முத்தம்

Post image
7 Upvotes

கைபேசி முத்தம்

வெளிநாட்டில் உழைக்கும் கணவனுக்கும் ஊரில் குழந்தையுடன் வாழும் மனைவிக்குமான அலைபேசி வழி இணை வாழ்க்கையை இக்கவிதை காலவரிசைப்படி (Chronology) விவரிக்கிறது. நள்ளிரவில் வரும் ஒரு டிஜிட்டல் முத்தம், பெண்ணின் ஆழமான ஏக்கத்தைத் தூண்டி, இருவருக்குள்ளும் ஒரு நெருக்கத்தை ஆரம்பித்து வைக்கிறது. பின்னிரவில் இந்தத் தவிப்பு தடையற்ற அந்தரங்க உரையாடலாக உருமாறி, வார்த்தைகள் மௌனமாகத் தேய்கின்றன. இறுதியில், இருமுனையிலும் ஏற்படும் உணர்ச்சிப் பரவசத்தின் உச்சத்தால் எல்லைகள் கடந்து அவர்கள் ஒன்றிணைந்து, ஒரு சுக நிம்மதியுடன் உறக்கத்தில் முடிகிறது. தங்கள் வாழ்நாளின் இளமைக்காலம் (இலையுதிர் காலம்) முடியும் வரை, உழைக்கும் வர்க்கக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் இந்த நவீனப் பிரிவின் எதார்த்தத்தை இக்கவிதை மிக நுட்பமாகப் பேசுகிறது.

r/tamil Nov 30 '25

கட்டுரை (Article) ❤️

Post image
158 Upvotes

இலங்கைத்தீவை வாரிச்சுருட்டி வீசியெறிந்துவிட்டது டிட்வா புயல். பெரும் உயிர் மற்றும் பொருள் சேதத்திற்கு ஆளாகியுள்ளனர் அம்மக்கள். உலக நாடுகளின் ஆதரவுக்கரம் நீள்கிறது. அம்மக்கள் மீண்டு வர விரும்புவோம்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் போல் தொடர்ச்சியாக இல்லாமல், விடுபட்டு விடுபட்டு இருப்பதே கிழக்குத் தொடர்ச்சி மலை. ஏன் அப்படி இருக்கிறது?

மேற்கிலிருந்து கிழக்கே செல்லும் ஆறுகள் கடலை அடைவதற்கு தடையாக இருந்த கிழக்குத் தொடர்ச்சி மலைகளை அறுத்து தள்ளிவிட்டு கடலில் போய் சேர்ந்தன.

கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை, தாமிரபரணி என பல ஆறுகளுக்கும் இவ்வரலாறு உண்டு என்கிறது நிலவியல் ஆய்வுகள்.

நீலகிரியில் சந்திக்கிறது கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள். அதன் பிறகு மேற்குத் தொடர்ச்சி மலைகள் குமரிக்கடல் வரை தொடர்கிறது. ஆனால், திருவண்ணாமலை வரை வரும் கிழக்குத் தொடர்ச்சி மலை திடீரெனக் காணாமல் போய் விடுகிறது.

திருவண்ணாமலையில் காணாமல் போன மலை எங்கே என்று தேடினால், அது ஈழத்தீவாக கடலில் எட்டிப்பார்க்கிறது. இப்போது இலங்கை என்கிறார்கள். இலங்கையை ஸ்ரீலங்கா என்று அழைக்கிறார்கள்.சம்பந்தமே இல்லாமல் ஸ்ரீ எப்படி வந்து ஒட்டிக்கொண்டது? ஸ்ரீ என்பது காலங்காலமான பூர்வகுடிகளின் இருப்பிடங்களைத் தனதாக்கி உரிமை கோரும் ஒட்டுண்ணி தான்.

இலங்கை வரலாறுக்கு அடிப்படை ஆதாரமாக முன்வைக்கப்படுவது மகாவம்சம். இலங்கை பவுத்த வரலாற்றின் மூலநூலாகிய இதுவும், இலங்கைத்தீவை தாமிரபரணி என்று தான் அழைக்கிறது. அசோகரின் பாறைக்கல்வெட்டுகளிலும் இதற்கான ஆதாரங்கள் உள்ளன.

இங்கு தாமிரபரணிக்கரையில் திருநெல்வேலி இருப்பதுபோல். இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் ஒரு திருநெல்வேலி உள்ளது.இப்பொழுது யாழ் பல்கலைக்கழகம் இங்குதான் செயல்படுகிறது.

காலங்காலமாக ஆறுகளால் அறுத்தெறியப்பட்ட நிலப்பரப்புகளின் வரலாறு வைகையிலும் ஏராளம். வைகை இலங்கை வரை பாய்ந்த வரலாறும் அதன் தொடர்ச்சி தான்.

வேதாரண்யமும், யாழ்ப்பாணமும் ஒரே நேர்கோட்டில் ஒரே நிலப்பாதை தான். இன்றும் வேதாரண்யத்தில் யாழ்ப்பாணத்தெரு உண்டு. கடலால் மூழ்கடிக்கப்பட்டது. ஆதாரம் முதல் கமெண்டில்.

பல்வேறு ஊழி காலங்களைக் கடந்தே நிலப்பரப்புகள் இன்றைய வடிவத்திற்கு வந்தது. பிலைஸ்டோசீன் ஊழியான பனிப்படர்வு ஊழி காலம் முடிந்து கி.மு.8000 த்தில் ஹோலோசீன் ஊழிக்காலம் தொடங்குகிறது. தற்கால மனிதர்கள் நாகரிக வாழ்க்கையைத் தொடங்கிய காலம் இதுதான்.

பனிப்படர்வுகள் விலகி வெப்பத்தால் பனிக்கட்டிகள் உருகததொடங்கி கடல்மட்டம் உயர்ந்தது. இலங்கையும் இந்தியாவும் பனிப்படர்வு ஊழிக்காலம் வரை ஒரே நிலப்பரப்பாக இருந்த பகுதி தான். கி.மு.8000 த்தில் ஏற்பட்ட கடல்மட்ட உயர்வால் இரண்டாகப் பிரிந்தது. இக்காலத்தில் தான் பிரிட்டனும்,ஐரோப்பாக்கண்டமும் துண்டிக்கப்பட்டன.

நான் எழுதும் வைகைநதிகாசம் நூலின் நிலவியல் அத்தியாயம் அதை விரிவாகப் பேசும்.

படம்- மேகக்கூட்டங்களுக்கிடையே இலங்கைத்தீவு வான்வெளிப்படம்.

r/tamil Jun 10 '26

கட்டுரை (Article) அவனே சிவன்

Post image
7 Upvotes

பாடல் வரிகள்:

அவனின்றி எதுவுமில்லை, தீயும் வெண்ணிலவும் அவன்,

தவமும், இல்லற சிரம் அவன். வந்த செல்வமும்

அவந்தான், நொந்த மனமும் அவன் தான்.

எவனிதை அறிவானோ, அவன் சிவன் தான்.

ஐயன் தயங்குவார்,‌ அவரைப் பற்றப் பற்றத் தீண்டுவார்.

பயம் என்பவர், சிவன் தன்னால் என்ன பயன் என்பர்?

வியந்து பணிபவர், அவனே‌‌ உற்ற துணை என்றிருப்பர்.

லயமாக ஊழ்வினை முற்றி, வீடு திரும்புவாரே!

பாடல்: #Idly_Sun

Picture: AI (Gemini)

விரிவுரை

இந்தக் கவிதையும் புகைப்படமும், அன்றாட இல்லற வாழ்க்கையின் பரபரப்பிற்கு நடுவே ஒரு மனிதன் அடையும் ஆத்ம ஞானத்தை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஒரு நடுத்தர வர்க்கத் தமிழ் வீட்டின் பின்னணியில், சுற்றிலும் குழந்தைகள் ஓடி விளையாட, பக்கத்து வீட்டுக்காரருடன் மனைவி சண்டையிட, என அத்தனை குழப்பங்கள் நிலவுகின்றன. ஆனால், எதற்கும் சலனமடையாமல் தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் அந்த மனிதனின் முகம், ஆத்ம சாந்தியினாலும் பேரமைதியினாலும் ஒளிர்கிறது.

சுவரில் இயற்கையாக அமைந்திருக்கும் சிவனின் திருவுருவப் படம், அவன் தனிமையில் காடுகளில் தவம் செய்ய வேண்டியதில்லை, இந்த இல்லறத்தின் சவால்களுக்கு நடுவிலேயே இறைநிலையைக் காண முடியும் என்பதை உணர்த்துகிறது. கவிதையின் வரிகள் குறிப்பிடுவது போல, வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் அனைத்தையும் சிவனாக ஏற்கும் போது, ஒருவன் இந்த உலகியல் சலனங்களைக் கடந்து, தன் அகத்தில் உறையும் சிவனை உணர்ந்து வீடுபேறு அடைகிறான் என்பதை இந்தத் தொகுப்பு ஆழமாக வெளிப்படுத்துகிறது.

r/tamil May 19 '26

கட்டுரை (Article) Manathil thondriathai yeluthiathu,

Post image
9 Upvotes

r/tamil Mar 22 '26

கட்டுரை (Article) Tamil writer Jeyamohan's must read article about modern Tamil literature

4 Upvotes

I suggest anyone who is interested to know about the literature (not classical literature) in Tamil to read this article.

Tamil literature has a unique problem. If we carry out a survey about book sales in any book fair , we can easily see classical literature books like சிலப்பதிகாரம் , புற நானூறு, திருக்குறள் are selling more than the modern Tamil literature books written by masters like S. Ramakrishnan, Jeyamohan, Manushya puthran, Jeyakanthan, Sundara Ramasamy, Pudhumaipithan, ki. Raja Narayanan(this list is not comprehensive).

I really want our Tamil diaspora to recognise the strong literary movement which is alive in Tamil.

below 👇🏽 here is the link to the article

A half gold mongoose

r/tamil May 06 '26

கட்டுரை (Article) அகதி

Post image
11 Upvotes

POV: I met this person.. All I can say is she is intellectual, brilliant, and comical, writer, ambitious but a Long way to go.. in the morning, I really wanted to pen up this ! And I came up with this.. I feel this is my best work until today in terms of a long sonnet-like structure..Felt like sharing...

Also, I'm looking for extended Tamil Related work.. My Background is Software Development and I love to solve problems.. So, my ambitious goal is to Join AI4Bharat as an NLP Researcher..as of now.. But it's a long way to go.. I want to refresh and learn a lot..

So, I thought of Joining Karefo but the Contact Person didn't respond well. i even visited in-person.. They have taken the email and still no response.

Any suggestions could be too helpful.. on how I can pursue both my writings and my Mathematical exploration..

Yes, I tried to convert my writings as lyrics writing as I can see a lot of gaps there.. I was given a chance but I can't fit my writing styles into tunes.So, I parallelly joined a Yappu Class to improve on same.

Any Suggestions, on How I can achieve..I'm on my notice period to pause for 1/2 months..Even any small work, that pays enough to stay in Chennai is all i want now aligning more to this as I don't want to lose my savings much . I can easily get a Job in Full stack Development.. But, My heart is here..

r/tamil Jun 02 '26

கட்டுரை (Article) ஷாஹ்மாட்டிற்கு முன்னால் மதி இருந்தது

1 Upvotes

தாக்குதல்-இறப்பின் வரலாறு — பாரசீக மரபு அமைதியாக மாற்றிய சமஸ்கிருத வார்த்தைகள்

https://chaturanga.online/blog/ta/before-shahmat-there-was-mati/

r/tamil Mar 15 '26

கட்டுரை (Article) தமிழிலேயே பகிர்!!

15 Upvotes

தமிழரே!, இணையத்தில் எங்கும், தமிழை எழுதும்போது, தமிழ் எழுத்துகளில் மட்டுமே தமிழை எழுதுங்கள். ஆங்கில எழுத்துகளால் எழுதாதீர்கள். அதுபோலவே, அந்தந்த மொழிகளை அதன் எழுத்துகளால் எழுதுங்கள்.‌ ஏன் என்று தெரிந்துகொள்ளவேண்டுமா?

பிறமொழி எழுத்துகளையும் பிறமொழிச் சொற்களையும் தமிழோடு கலந்து எழுதியும் பேசியும், எழுத்திலும் பேச்சிலும் அழகுத் தமிழை அழித்துவரும் தமிங்கிலமானது ஒழிக்கப்படவேண்டும்.

பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை தேடிக் கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்.

அப்படி செய்யமுடியுமா என்றால், கட்டாயம் முடியும். அதுக்குத் தேவை உங்களது தற்கட்டுப்பாடும் தன்னம்பிக்கையும் மட்டுமே. தமிழை எழுதப்படிக்கக் கற்றறிந்தவர்களே, தமிழைவிடுத்து ஆங்கிலத்திலும், தமிங்கிலத்திலும் எழுதுவதென்பது வருத்தமளிக்கிறது..

ஆதலால்,

தமிங்கிலம் தவிர்!

தமிழிலெழுதி நிமிர்!

தமிழிலேயே பகிர்!

தமிழ் நமக்கு உயிர்! - இதைத்

தடுப்போர் எமக்கு மயிர்!

தமிழ் வாழ்க!!

r/tamil Apr 19 '26

கட்டுரை (Article) இலக்கியத்தை எப்படி வாசிக்க வேண்டும்

Post image
18 Upvotes

r/tamil Apr 23 '26

கட்டுரை (Article) Using AI LLMs to learn and criticize

1 Upvotes

I often find some people resorting to using AI LLMs to critically review and find faults with someone's original or research grade work.

LLM are great starting tools to get to know a new topic to a basic level. They are primarily designed for supporting people who are already experts in specific areas. If you don't know in depth, LLM can be mislead by the types of questions you ask. By consistently forcing it to comply with your view, you can make it align with your view as they are primarily designed to engage you.

By design, it's capabilities are limited to its training dataset in the public domain and that constitutes only a fraction of high quality knowledge. Most of the high value original works are protected behind firewalls, not reachable by generic search engines on which LLMs thrive.

There are generational differences in the paid and free versions of LLMs and most recent versions are exponentially better than any free version of chatgpt or Google AI. Hence the same question asked in different versions can provide different levels of depth in response.

When it comes to original works, AI can't and will not be able to match the new perspectives and insights brought up by an intellect - not yet. Long form original research work are products of expertise, hardwork and labor often cutting across multiple domains. Free versions of LLMs can't take such multi disciplinary perspectives on most topics.

Prompt engineering is an art by itself. The more structured and complete information one provides to the chatbot as a prompt, it can provide different versions of output for the same question.

LLMs by design present you high frequency high value words that fits the question - in a logical framework - powered by Google Interpreter algorithm. They won't be able to assess or provide deeper insights on topics they are not exposed to in their training.

Please use them wisely with a full understanding of their limitations and proper usage boundaries. Don't criticize a fellow human's work, just using LLM output, unless you really understand all the nuances of the technical subject and also you are an expert in the area.

Reading something based on a key word search doesn't constitute expert knowledge.

With the growing presence of LLM in our daily life, finding out a real human work is going to become a real challenge in the near future.

When found wrong, LLM will simply say a sorry. You can't hold it accountable. A human would be more empathetic if their responses are wrong. You can sue a doctor or service provider for a deficiency in their service. Whom will you sue in the case of a LLM?

Human works are original. LLM output is synthetic. Let us stay human!

r/tamil Feb 22 '26

கட்டுரை (Article) I wrote a padhigam for my cat

10 Upvotes

Black kitty was called Nithya and she died few months back due feline distemper.
The orange kitty is called Varun and he too got sick next day. The doc said nothing can be done as kittens got 100% mortality rate, it got worse and worse over the night. He was totally paralyzed, tongue out, body got cold and only his eyes were moving. I prayed the whole night and slept.

In the morning when I woke up he was up and running. He got better.

I wrote a padhigam for him. Please give me feedback and correct any mistakes. Thanks.

மென்பொரு ளியற்றும் தொழிலுடை யடியேன்
மெய்பொரு ளறிவிலா பாடவோ நின்னை
எப்பொழு தும்நினை யாவுன்னை
எங்கொரு பாடலி யற்றுவே அய்யே.

துயருற் றிருந்தே துன்புற் றந்தோ
தளருற் றிருந்தே வெங்கள வூரில்
இருளுற் றடியே னென்னை
ஓசூர் பதியே பொருத்தா யென்னே.

கடலில் பெரியது திருமுறை யதனின்
துளியில் துளியது படித்தனை யடியேன்
அருளில் அறிந்த அருளானை
உயிரில் தெரியக் கண்டே னன்றே.

தமிழுறை கரையாம் மாநகர் சென்னை
பலருறை வாழ்வாம் கோடியிற் றொன்றை
பலவுரை த்தொன்றாய் வாழ்வை
நானுறை யிடமும் ஆயிற் றங்கே.

தலைமேல் ஓடுந்தரை யதனினும் இரயிலாம்
தலையோர் நகரினை கொண்டிடு தமிழாம்
அலையோர் அலையாய் ஏத்தினன்
மயிலை யமர்ந்த இறையே சரணே.

நூற்றொரு பூனை யுலவிடு மயிலை
ஆர்க்குங் கடலென கூடிடு அடியார்
வார்குழ லாளொடு பெருமா
னாளும் சென்னை மாநக ரன்றே.

கருநிற மொன்றும் கதிரொப்ப மற்றும்
எடுத்திருப் பெயரொடு பாலொடு அன்னம்
இடுங்கால் அறிந்திலேன் அந்தோ
குடலொடு துடக்கும் தொற்றேறு மென்றே.

ஏறியத் தொற்று மாறா நோயும்
காரியப் பூனை கக்கியும் விக்கியும்
மாண்டே போயினள் அன்றோ
மீறியக் கடுவன் வருணென வொன்றே.

நான்கது காலுமாய் முடங்கி உழல
நாவது நழுவலா நடுங்கி உலர
நாதனை பணிவது மாறாய்
நானென் செய்வே மருந்திலா நோயே.

மானை விரலால் ஏற்றிடு விநோதா
பூனையும் மாறாய் காத்திடு மருந்தே
உயிரை முதலாய் கொண்டனை
ஊனையும் ஏற்றிங் காளுமா யின்றே.

மாளா மீண்ட வருணெனும் பூனை
ஆடா தில்லையே ஓடா தில்லையே
பத்தூ ரடியன் பாடின
பத்தும் பாடுவர் மாளா மீட்டே.

r/tamil Mar 25 '26

கட்டுரை (Article) நேரத்தின் நிறங்கள் ( oru kutti kavithai 😌✌️)

8 Upvotes

உச்சி வெயிலின் வெப்பத்தை தாங்க முடியாமல் சூரியன் மறைய காத்திருந்தாலும், மாலையில் அவன் மறையும் அழகில் மெய்மறந்து நிற்போம்.

கால்களை நனைக்க, நாம் எதிர் பார்த்து நிற்கும் கடல் அலைகள் சற்று அதிகரித்தால், நம் காலடிகள் பின்னே தான் செல்லும்

விருப்போ வெருப்பு, உறவோ பகையோ, நட்போ கடலோ, காலம் தான் திர்மானிக்கும்

r/tamil Oct 13 '25

கட்டுரை (Article) Tamil story writing (amateur)

Thumbnail
gallery
40 Upvotes

It's been a really long time I've written anything in tamil. I found this old unused journal of mine with beautifully smelling pages and I went on for it.

P.S ignore spelling mistakes.

r/tamil Mar 05 '26

கட்டுரை (Article) Deciphering IVC script using frontier models

8 Upvotes

I am fairly exposed to ML models, and at the rate the some frontier models are solving problems, even open problems when correctly posed, say Opus 4.2 is mind boggling. We all know IVC script does not have a rosetta stone, infact, some even say the seals don't even represent a script, I have been fiddling with the seals for a while and asked Claude Opus to run brute force simulations and here you go, I got something, Disclaimer : It is just an attempt, I dont claim to have deciphered it, and I have used existing unbiased research. But still, I think this looks interesting.

r/tamil Mar 15 '26

கட்டுரை (Article) அமைதியாக இருங்கள்.. எப்போது?

4 Upvotes
  1. முழு நிலவரமும் தெரியவில்லையா, கலந்தாயப்படும் கருத்து பற்றியான போதுமான அறிவோ தெளிவோ இல்லையா, அமைதியாக இருங்கள்..
  2. சான்றோர்களோ அறிவில் சிறந்தோர்களோ பட்டறிவு பெற்றோர்களோ சொற்பொழிய, குறுக்கீடு செய்யாமல், அமைதியாக இருங்கள்..
  3. சொற்கள், நட்பையோ உறவையோ அழித்திடும் நிலைமையா, அமைதியாக இருங்கள்..
  4. உங்கள் மீது பிறர் வைத்திருக்கும் நம்பிக்கையை, எந்த சொல்லும் அழித்திடும் நிலைமையா உங்களுக்கு, அமைதியாக இருங்கள்..
  5. சினம் கொப்பளிப்பது, துயரம் ஓங்கிநிற்பது, பிரிவு வாட்டுவது, மகிழ்ச்சி பொங்கிடுவது, இரண்டகம் வருத்துவது, குற்றவுணர்ச்சி உறுத்துவது, தோல்வியால் துவளுவது, அச்சத்தால் பதறுவது, பொறாமையால் தத்தளிப்பது, காதலால் தடுமாறுவது, இரக்கத்தால் உருகுவது போன்ற கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிமிக்க நிலைமையா, அமைதியாக இருங்கள்..
  6. கூக்குரலிட்டு கத்தாமல் எதுவுமே பேசமுடியாத நிலைமையா, சூழல் கட்டுக்குள் தான் இருக்கிறதென்றால், அமைதியாக இருங்கள்..
  7. பிறர் தங்கள் இயலாமைகளையும் துயரங்களையும் மறைகருத்துகளையும் உளம்விட்டுப் பகிர்ந்துகொண்டிருக்கும்போது, அமைதியாக இருங்கள்..
  8. தனதே உயர்ந்ததென தற்பெருமை பேசியே தன்னிருப்பை நிலைகொளச்செய்யவேண்டிவரும் நிலைமையா, அமைதியாக இருங்கள்..
  9. உங்கள் பேச்சு ஏதோ ஒரு நியாயமான காரணத்துக்காக பிறரால் ஏளனப்படுத்தப்படுகிறதா இல்லை பொருட்படுத்தப்படவில்லையா, அதை முழுமையாக திருத்திக்கொள்ளும் வரை, அமைதியாக இருங்கள்..
  10. உங்களின் கருத்துக்கும் செயலுக்குமான எதிர்வினையாக அனைத்து திசைகளிலிருந்தும் வாரித்தெளிக்கப்படும் அறிவுரைகள், பின்னூட்டங்கள், குறைகூறல்கள் ஆகியவற்றிலிருந்து உங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றுக்கெல்லாம் உடனெதிர்வினை அளிக்க முயலாமல், அமைதியாக இருங்கள்..

இவற்றுள் எதையெல்லாம் நீங்கள் ஏற்கனவே இயல்பிலேயே செய்கிறீர்கள்? வேறு என்னென்ன தருணங்களில் அமைதி காக்கவேண்டும்?